Wednesday, August 17, 2011


நாளை (18.08.11) என் அம்மாவிற்கு நடக்க இருக்கும் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலமுடன் வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். எப்போதுமே கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கிட்டதட்ட ஒன்றரை மாதமாக நாங்கள் ஏஞ்ஜியோகிராம் பார்க்க, வேறு மருத்துவரைப் பார்க்கவென அலைந்து கொண்டிருந்தோம். கோவையில் நாங்கள் பார்த்த மருத்துவமனை டாக்டர்கள், அடைப்பு 90 முதல் 100 சதவீதம் உள்ளது. சர்ஜரி தான் செய்ய வேண்டும், ஆனால் அம்மா சர்ஜரி தாங்கும் நிலையில் இல்லை, மாத்திரை சாப்பிட்டு எத்தனை நாட்கள் இருக்க முடியுமோ அவ்வளவுதான் என்று சொல்லி விட்டார்கள்.
பல டாக்டர்களை நாங்கள் அணுகிய போது மதுரையில் இந்த டாக்டர் மட்டும் பயமில்லை, சர்ஜரி செய்யலாம் என்று கூறவே, வெள்ளியன்றே மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறோம். நாளை  (18.08.11) காலை 9 மணிக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அம்மா நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 

;;