Saturday, May 1, 2010

காணாமற் போன ரகசியம்...

ஒரு பதினைந்து நாட்களாக பிளாக்குக்கு மட்டுமன்றி, அங்கு இங்கென எங்கும் போக முடியாதபடி வேலை....வேலை...வேலை. அப்படி என்னதான் பெரிய வேலை என்கிறீர்களா? வருடாந்திர பொருட்கள் வாங்குங்கன்னு எல்லாருக்கும் சொன்னால் போதுமா? நானும் அந்த வேலையை செய்ய வேண்டுமே!

வருடாவருடம் வாங்குவது தான் என்றாலும், இந்த வருடம் பொருட்கள் வீடு வந்து சேர கொஞ்சம் தாமதம். தங்கை வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து வருவதில் ஆரம்பித்த வேலை இன்னும் முடியவில்லை.

கவருடன் வாங்கி வந்த பொருட்கள் காய வைப்பதற்கு தயாராக ....


வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கும் பொருட்கள்.....(பாதிப் பொருட்களின் படம் மட்டுமே போட்டுள்ளேன்).

கல் அரித்து, கழுவி முதல் நாள் துணியில் போட்டு காயவைத்து, அடுத்த நாள் தட்டில் காய வைக்கப்பட்டிருக்கும் கடுகு. 


காய வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும் பருப்பு.


 ஆறிய பின் முதலில் புடைத்து....

பிறகு சல்லடையில் சலித்து சுத்தம் செய்யப்படுகிறது.


பொருட்கள் போட தயாராக கழுவி, காய வைத்து, ஆறிக் கொண்டிருக்கும் பாட்டில்களும், டப்பாக்களும்.


காய வைத்த புளி உப்பு சேர்த்து, உருண்டைகளாக்கி வைக்கப்பட்டுள்ளது. கவரில் போட்டு ஃபிரீஸரில் அடுக்கப்பட காத்திருக்கிறது.


சாமான்களை டப்பாக்களில் போட்டு ஷெல்ஃபில் அடுக்கியாச்சு.


தினப்படி உபயோகத்திற்கென்று வெளியே வைக்கப் பட்டிருக்கும் பொருட்கள்.


 
சமைக்கப் போவதும், சமைத்ததும் பிறகு வரும் படங்கள் காட்டும்:-)

இந்தப் பதிவு பார்த்துட்டு ஏதாவது சொல்லிட்டு போனால், கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கும் சமைச்சு தருவேன் ;-)

;;