Monday, April 5, 2010

அழகாய் பூ(காய்)க்குதே!!

எங்க வீட்டுத் தோட்டத்தை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?

இந்த காலிஃபிளவர் - இமாவுக்கு!!!!


அழகான வெள்ளை ரோஜா!


இது ஒரு வகை கீரை!!!

 
குட்டி குட்டி கத்தரிக்காய்!!


ஸ்..ஸ்..ஸ்...ஆஆஆ!!!!! ரொம்ப காரம்!!


தென்னையும், புதினாவும்....

இன்றைக்கு சுற்றியது போதும். டயர்டா இருப்பீங்க! ஒரு காஃபி குடித்து விட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு மீதி தோட்டத்தை நாளைக்கு சுற்றிப் பார்க்கலாமா?



இதோ சூடான காஃபி :-))))))
BYE! BYE!!

Sunday, April 4, 2010

ஈஸ்டர் வாழ்த்துக்கள்

                       அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்

Thursday, April 1, 2010


விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் -2 தொடர்ந்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தி. பெரியவர்களே பாட கஷ்டப்படும் பாடல்களை சின்ன குழந்தைகள் பாடுவது ரொம்ப அழகு. அதிலும் குறிப்பாக ஸ்ரீகாந்த். ஆறே வயது நிரம்பிய அசத்தல் குழந்தை.

அத்தனை போடியாளர்களின் நடுவில் தன் திறமையால் தேர்வாகி, இதுவரை தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த்.

எந்த சுற்றானாலும் தன் இனிய குரலால் எல்லோரையும் வசப்படுத்தி வந்தார். அவனது குரல் இனிமைக்கு இந்நிகழ்ச்சியைப் பார்ர்க்கும் அனைவருமே கண்டிப்பாக ரசிகராகத்தான் இருந்திருப்பார்கள்.

கடைசி எட்டு பேரில் ஒருவராக இருந்த ஸ்ரீகாந்த் இந்த வார எலிமினேஷனில் வெளியேறினார். முடிவை சொன்ன மனோ அவர்கள், ஸ்ரீகாந்தை மடியில் உட்கார்த்தி வைத்து வாழ்த்தி பாடியது கூட அந்தக் குழந்தைக்கு புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஸ்ரீகாந்த் இல்லாமல் எப்படி இன்னும் 6 வாரம் போகப் போகுதுன்னு நினைச்சாலே கஷ்டமா இருக்குன்னு மனோ சொன்னார். நீ ஏதாவது பாட விரும்புகிறாயா என்று கேட்டவுடன், எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று அக்குழந்தை பாட, மனோவே அழுது விட்டார். அவர் வெளியேறும் போது கலங்காதவர்கள் இல்லை. நம் கண்களும் குளமாக பிரியா விடை கொடுத்தோம்.

அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி குழந்தையைப் பெற என்ன புண்ணியம் செய்தார்களோ? இந்த சின்ன வயதிலேயே எவ்வளவு திறமை!!!

ஹை பிட்ச் பாடல்களுத்தான் அவர் குரல் ஏற்றதாக இருந்தாலும், எல்லாப் பாடல்களையும் பயமின்றி அவர் பாடுவதே தனி அழகு தான். அதுமட்டுமன்றி மற்றவர்கள் அளவுக்கு அவர் வயதும் இல்லை. இந்த வயதில் இவ்வளவு தூரம் பாடல்களை நினைவில் வைத்துப் பாடுவதே பெரிய விஷயம். அதற்காவே அவரைப் பாராட்டலாம். எது எப்படியோ இந்நிகழ்ச்சியில் அவர் பாடுவது எல்லோருக்கும் ஒரு எண்டர்டெயினிங்காவே இருந்தது.

அவரின் திறமைகள் வளர்ந்து, பெரிய பாடகராக வர நாமும் வாழ்த்துவோம்.

கொசுறு: விரைவில் ஸ்ரீகாந்தை வெள்ளித்திரையிலும் காணலாம். சத்யராஜின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காராம்.

Wednesday, March 31, 2010

சமைக்குமுன் - பகுதி 2


சமையல் பற்றிய தொடர்ச்சி ரொம்ப நாளாக எழுதாமல் அப்படியே இருக்கு. எப்படியாவது இன்று அடுத்த பகுதி எழுத முடிவு பண்ணியாச்சு.

போன பகுதியில் சமைக்கும் போதும், சமையலுக்கு முன்னும் செய்ய வேண்டியது பற்றி சொன்னேன். இப்ப சமையலுக்கான பொருட்களைப் பற்றி சொல்கிறேன்.

எப்பவும் ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களை மாத ஆரம்பத்திலேயே வாங்கி வைத்துக் கொண்டால் இடையிடையே கடைக்கு ஓட வேண்டி வராது.

கடைக்கு செல்லுமுன் தேவையான பொருட்களை லிஸ்ட் எழுதி தயாராக வைத்துக் கொண்டால் அங்கு போய் குழப்பம் வராது. மளிகை சாமான்கள் தனியாகவும், மற்ற ஐட்டங்கள் (சோப், பேஸ்ட் போன்றவை) எழுதிக் கொண்டால் அந்தந்த பகுதிகளில் எடுக்க வசதியாக இருக்கும்.

விலை குறைவாக இருக்குன்னு தரம் குறைந்த பொருட்களை வாங்கி, வீணாகி தூக்கி எறிவதை விட கொஞ்சம் விலை கூடினாலும் தரமான பொருட்களை வாங்கினால் கொஞ்சம் நாட்கள் இருந்தாலும் கெடாமல் இருக்கும்.

முடிந்தவரை வீட்டுக்குத் தேவையான வற்றல், வடகம், ஊறுகாயை நாமே கோடை காலத்தில் போட்டு வைத்துக் கொண்டால் நம் டேஸ்ட்டுக்கு ஏற்றாற் போலவும் இருக்கும், மாத பட்ஜெட்டிலும் குறைக்கலாம்.

அந்தந்த மாதத்தில் வரும் பண்டிகையையும் மனதில் வைத்து பட்ஜெட்டில் போட்டுக் கொண்டால், பண்டிகை நேரத்தில் கடையில் நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. உதாரணமாக ஜனவரி மாதம் என்றால் பொங்கல் வரும். மளிகை சாமான் லிஸ்டில் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் எல்லாம் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் மாதத்தில் கொஞ்சம் கூடவே எல்லா சாமான்களையும் வாங்கி வைத்து விட்டால், அவர்கள் வந்த பின் வாங்கும் நிலையை தவிர்க்கலாம்.

இப்ப வருட சாமான்கள் காலம் (பங்குனி மாதம்). துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி, கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கொத்தமல்லி, வெந்தயம், கசகசா, மொச்சை, சுண்டல் எல்லாம் வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொண்டால் இடையில் கன்னா பின்னாவென்று எகிறும் விலைவாசியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். அரிசி கூட வருடத்திற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்தப் பருவத்தில் வாங்கினால் எல்லாமே விலை குறைவாக இருக்கும்.

ஐயோடா! அப்படி வாங்கி வைத்தால் வண்டு, பூச்சி வருமேன்னு கேட்கறீங்களா? சரியாக பக்குவப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக 2 வருடம் வரை கூட வைத்திருக்கலாம். இப்ப நான் வைத்திருக்கும் பருப்பு போன்றவை வாங்கி 2 வருடமாகிறது. ஒன்றில் கூட வண்டு, பூச்சி கிடையாது. ஒவ்வொன்றாக எப்படி பாதுகாப்பதுன்னு அப்புறம் சொல்கிறேன்.

;;