Monday, June 27, 2011

அம்மாவின் 51வது திருமணநாளுக்கு (27-06-2011) என்ன பரிசு கொடுப்பது என யோசித்த போது, அம்மா கொஞ்ச நாளாக கேட்டுக் கொண்டிருந்தது போல் புடவையில் நானே பெயிண்டிங் செய்து கொடுத்தால் என்னவென்று தோன்றியது. 15 நாட்களே இருந்த நிலையில் அதற்குள் முடிக்க முடியுமா என தோன்றியது. இதென்ன பிரமாதம்? ஊதித் தள்ளி விடலாம். 5 நாட்களிலேயே முடித்து விடலாம்  என்று சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தேன். புடவையின் கலரும், டிசைனும் ஏற்கனவே அம்மா சொல்லி இருந்தார்கள். 



அந்த டிசைனை டிரேஸ் பேப்பரில் வரைந்து எடுத்து, ஊசி வைத்து துளை போட்டு தயார் செய்தேன். 



தேவையான ஃபேப்ரிக் கலர்கள், அவுட்லைனர் எல்லாம் வாங்கி வந்தாயிற்று.

புடவையில் பிளவுசுக்கான பகுதியை அளந்து விட்டுவிட்டு, தொடங்க வேண்டிய இடத்தை மார்க் செய்து ஸ்டென்சில் பேப்பரை புடவை மேல் வைத்து சாக் பவுடரை மண்ணெண்ணையில் கரைத்து சின்ன துணியில் தொட்டு பேப்பர் மேல் தேய்க்க டிசைன் புடவையில் விழுந்தது. 





 3D அவுட்லைனர் கொண்டு டிசைனின் வெளிப்புறம் முதலில் வரைந்தேன். 
  


அவுட்லைனர் காய்ந்தபின் உட்புறம் பெயிண்ட் செய்தேன்.


ஆபீஸ் போய் வந்து மாலை 6 மணி போல் உட்கார்ந்தால் இடையில் டிபனுக்கு ஒரு மணி நேரம் போக, இரவு பனிரெண்டு அல்லது ஒரு மணி வரை போடுவேன். எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில்  முடித்து விடலாம் என நினைத்தேன். பாதி புடவை முடித்தபின் பிரச்னை ஆரம்பமானது. உடம்பு ரொம்ப முடியாமல் போக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இதனால் நான்கு நாட்கள் வேலை தடைபட்டது.

இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன். 


உடம்பு ரொம்ப முடியாமல் போக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. இதனால் நான்கு நாட்கள் வேலை தடைபட்டது. உடம்பு ரொம்ப முடியவில்லையென்று ஆபீஸுக்கு லீவு போட்டேன். இப்போதைக்கு உடம்பு முழுதும் சரியாகாது என்று தெரிந்தபின், இனியும் கால தாமதம் செய்தால் சரியான நேரத்திற்கு புடவையை அனுப்ப முடியாது என்று தோன்றவே மனது கேட்காமல் பெயிண்ட் பண்ண திரும்பவும் புடவையைக் கையில் எடுத்தேன். தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் உடம்பு கஷ்டப்படுத்த, சிறிது நேரம் பெயிண்ட் செய்வது, சிறிது நேரம் படுப்பதுமாக வேலையைத் தொடர்ந்தேன். லீவும் இரண்டு நாட்கள் தான். திரும்ப ஆபீஸ் போக ஆரம்பித்தாயிற்று. மூன்றே நாட்கள் தான், அதுவும் இடையில் ஞாயிற்றுக்கிழமை வேறு. அடுத்த நாள் அனுப்பினால் தான் திங்களன்று அம்மா கைக்கு போய்ச் சேரும். வெள்ளியன்று இரவு உட்கார்ந்து வேலையை முடித்து விட்டுத்தான்  படுத்தேன்.



 


 இரவு முழுக்க காயவிட்டு, காலையில் அயர்ன் செய்து கையோடு   ஆபீஸ்  எடுத்து போனோம்.

அப்பாவுக்கு ஒரு சர்ட் எடுத்து அதையும் சேர்த்து பேக் செய்து மாலை வீடு திரும்பும் போது நேரே கொரியர் ஆபீஸ் போய் பார்சலை அனுப்பி விட்டு வந்தோம்.

எப்படியும் திங்கள் காலை அம்மா கையில் போய் சேர்ந்து விடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். இன்று காலையில் அம்மா, அப்பாவை போனில் கூப்பிட்டு வாழ்த்தி விட்டு, கூரியர் வந்தது பற்றி ஏதும் சொல்வார்களோ  என்று பார்த்தேன். தங்கையிடமும் கூப்பிட்டு விசாரித்தால் இன்னும் வில்லையென்று சொன்னாள். கொரியர் ஆபீஸ் கூப்பிட்டு கேட்டால் கொண்டு போய்க் கொடுக்க ஆள் இல்லை, நாளைக்கு தான் டெலிவரி செய்ய  முடியும் என்று சொல்கிறான். நாங்களும் எங்கெங்கோ கூப்பிட்டு பேசியும் பலனில்லை. நாளை காலை 10 மணிக்கு எப்படியும் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள்:-(

(கூரியரில் ஒவ்வொரு முறையும் இதே போல் தான். வீட்டிற்கு போன் செய்து உங்களுக்கு கூரியர் வந்திருக்கு, ஆபீஸுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். 80 வயதான அப்பா ஆட்டோ பிடித்து  போனால், ஒரு மணி நேரம் உட்கார வைத்து ஐடி செக் செய்து பிறகு பார்சலைக் கொடுப்பது என்பதே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  போன முறை  மருந்து அனுப்பி மூன்று நாட்கள்  கழித்து, கொண்டு வந்து கொடுத்தார்கள். இவ்வளவுக்கும் எல்லா ஊர்களிலும் கிளை பரப்பி, பெரிய பெயரோடு இருக்கும் புரஃபசனல் (!!!!)  கூரியர் தான் அது.)

சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று அம்மாவிடம் இன்னமும் சொல்லவில்லை. பரிசு தான் போய்ச் சேரவில்லை. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களாவது அவர்களுக்கு போய் சேரட்டும்!!!

;;