Tuesday, April 26, 2011

                                                                   
வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் எனதன்பு வணக்கம்!!! மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் முகம் காட்ட வந்துள்ளேன். நிறைய நாட்கள் கழித்து திரும்ப வந்திருக்கிறேன். பெண்ணின் விபத்துக்குப் பிறகு நான் திரும்பவும் வர வேண்டுமென நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. மனம் வெறுத்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட எண்ணியே முடிவெடுத்திருந்தேன். தோழி ஸாதிகாவின் வார்த்தைகளே திரும்ப என்னை இங்கே வர வைத்தது. நன்றி தோழி :-)

நான் பிளாக் துவங்கி ஒரு வருடமும் முடிந்து விட்டது. ஆனால், நான் போட்டிருப்பது என்னவோ வெறும் 50 பதிவுகளே! என்னால் மற்றவர்களைப் போல அடிக்கடி பதிவிடவும் முடிவதில்லை. ஆபீஸ் போய் வந்து, வீட்டு வேலைகள் முடித்து கிடைக்கும் சிறிது நேரத்தில் முன்பெல்லாம் கம்ப்யூட்டரே கதியென்று இருந்தேன். அதனால் மற்ற வேலைகள் எதையுமே கவனிக்க இயலாமல் கொஞ்ச காலம் போனது. ஆரம்பித்து வைத்திருந்த நிறைய வேலைகள் பாதியில் நின்று போயிருந்தது. கிடைத்த இந்த இடைவெளியில் அவைகளையாவது முடிக்க நினைத்தேன். ஓரிரு வேலைகளை முடிக்கவும் முடித்தேன். அவை என்னவென்று அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேனே:-)

இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் பார்த்தால் வேலைகள் முடியவும் போவதில்லை, நாமும் இப்போதைக்கு வரமுடியப் போவதில்லையென்று தோன்றியது. தோழி.ஸாதிகா என்னை இந்த 15 நாட்களாக ரொம்பவே எதிர்பார்த்திருப்பாங்க. அவர்களுக்காகவாவது விரைவில் இங்கு வர வேண்டும் என நினைத்தேன். இடையில் ஒரு முக்கியமான வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால், அதை நல்லவிதமாக முடித்த திருப்தியோடு இங்கு வந்திருக்கிறேன். என்னை ஞாபகம் வைத்து, இங்கு எட்டிப் பார்ப்பவர்கள் எல்லோரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க:-)


அட! மறந்துட்டேனே, திருப்தியோடு முடித்த வேலை என்னவென்று கண்டிப்பாக அடுத்த பதிவில்........

;;