Sunday, March 21, 2010

நைட்டி கலாச்சாரம்




ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனுஷனைக் கடித்துங்கிற மாதிரி இந்த நைட்டி சமாச்சாரம் ஆகி விட்டது.

நைட்டி என்றால் இரவு உடைங்கிற அர்த்தமாவது நிறைய பேருக்கு தெரியுமா தெரியாதான்னு சந்தேகமாக இருக்கு.

ஆரம்பத்தில் இரவில் மட்டும் நைட்டி அணிவது,  அதிலும் மேல்தட்டு மக்கள் தான் அதிகம் அணிவது என்று இருந்தது. மெல்ல மெல்ல மாறி வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் பெண்களின் உடை நைட்டி என்பது போல் என்றாகியது. வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் உடை மாற்றிக் கொண்டு இருந்தனர். அதுவும் பிறகு மாறி ஒரு துப்பட்டாவோ, துண்டோ மேலே போட்டுக் கொள்ளவாவது செய்தனர். சமீபமாக அதற்கும் ஒருபடி மேலே போய் அப்படியே பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கும் போய் வர ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்தில் நான் கண்ட இரு காட்சிகள் இதற்கெல்லாம் மேலே..

நேற்று முன் தினம் காலையில் 10 மணிக்கு நாங்கள் டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றோம். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண் தனது குழந்தையுடனும், வேலைக்காரப் பெண்ணுடனும் அங்கு வந்தாள். அதிலென்ன இருக்கு, ஹோட்டல்னா நாலு பேர் சாப்பிட வரத் தான் செய்வாங்கன்னு சொல்றீங்களா? கூட வந்த வேலைக்காரப்பெண் நீட்டாக உடை உடுத்தி, நன்றாக தலைசீவி வந்திருந்தாள். அந்தப் பெண்ணோ தூங்கி எழுந்த முகத்தை கழுவி விட்டு சரியாக துடைக்கக்கூட இல்லாமல் தூக்கி சொருகிய முடியுடன் நைட்டியோடு வந்திருந்தாள். அதற்குப் போதுமான உள்ளாடைகள் கூட இல்லை. பார்த்தால் உடல்நிலை சரியில்லாதவள் போலும் இல்லை. நன்றாகவே இருந்தாள். ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் முகச் சுளிப்போடு பார்த்தனர். அப்படியே வந்து சாப்பிட்டு விட்டு சென்றாள். குழந்தைக்கு வேலைக்காரப் பெண் ஊட்டி விட்டாள். நிச்சயமாக பக்கத்திலேயே உள்ள வீட்டில் இருந்து தான் வந்திருக்க வேண்டும். பணம் எடுக்க ஆகும் நேரம் ஆகுமா, உடை மாற்ற? அந்த ஹோட்டல் ஒன்றும் மூலையில் உள்ள சாதாரண ஹோட்டல் அல்ல. டூரிஸ்ட்டுகள் வரும் மெயினான இடத்தில் உள்ள பிரபல ஹோட்டல் தான். தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக சாப்பிட்டு வெளியே வந்தோம்.

அதே நாள் மதியம் இதை விட கோபமேற்றும் சம்பவம்.

பீச்சில் நடந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் ஒரு பெண் நைட்டியுடன் வந்து பொருட்களை செலக்ட் செய்து வாங்கிக் கொண்டு இருந்தாள். எவ்வளவு பேர் வரும் இடம், நைட்டியுடன் வரலாமாங்கிற அறிவு கூடவா இருக்காது? அதுவாவது பார்க்க நீட்டாக இருந்தாலும் பரவாயில்லையே! சகிக்க முடியவில்லை.

அணிவதற்கும், வேலை செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது என்பதற்காக இப்படியா? வெளியில் வரும் போதாவது கண்ணியமான உடைகள் அணிய வேண்டும் என்று தோன்றாதா? நாமே இப்படி உடை உடுத்தி விட்டு பார்க்கும் ஆண்களைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம் நாம்?

எந்த இடத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்ற விவஸ்தை கூடவா பெண்களிடம் குறைந்து போய் விட்டது? மற்ற அலங்காரத்திற்கு ஆகும் நேரம் ஆகுமா உடை மாற்ற?

சமீப காலமாக, பல டீன் ஏஜ் பெண்கள் உடை உடுத்துவது பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. லோஹிப் பேண்ட், கண்டபடி வசனம் எழுதிய டீசர்ட்னு நன்றாக இருக்கும் ஆண்களைக் கூட கெடுப்பது போல் உள்ளது. பிள்ளைகளுக்கு தெரியவில்லை என்றால், அப்பெண்களின் அம்மாக்களாவது பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சொல்லித் தர மாட்டார்களா? நம் பெண் நீட்டாக உடை உடுத்தி வெளியே செல்கிறாளா என்பதைக் கூட கவனிக்க முடியாத அளவு பிசியாகி விட்டார்களோ?

பெற்றோர்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதில் உடை விஷயம் அத்தியாவசியமான ஒன்று. மாடர்ன் உடைகள் உடுத்த வேண்டாம்னு சொல்லவில்லை. பார்க்க கண்ணியமாக இருப்பது போல் உடுத்த சொல்லிக் கொடுக்கலாமே!

15 comments:

kavisiva said...

அய்யோ செல்விம்மா இந்த நைட்டி பார்ட்டிங்களோட தொல்லை தாங்கல. இங்க(சிங்கப்பூரில்) சிலபேர் மாலுக்கு கூட நைட்டியோட வந்திடறாங்க. ஜுரோங் வெஸ்ட் பயனீர் மாலில் நான் அடிக்கடி பார்க்கும்காட்சி இது :(

geetha said...

ஆமா, செல்விக்கா என் மனதினையும் ரொம்ப நாளா உறுத்திய விஷயம் இது.
எங்க வீட்டில் பகலில் நைட்டி போட தடை. இரவிலும் ஆண்கள் எல்லாரும் படுத்தபிறகே நைட்டிக்கு மாறனும். காலை புடவை கட்டிட்டுதான் ரூமை விட்டு வெளியே வரணும்.
இப்பல்லாம் சிட்டிக்கு போட்டியா வில்லேஜிலும் எங்கேயும் நைட்டிதான்.
முன்பெல்லாம், புடைவையை இழுத்து செருகிட்டு குழாயடி சண்டை போடுவாங்க. இப்ப நைட்டியில் அந்த அழகு வருமான்னு யோசிச்சு பார்க்கனும்.

Menaga Sathia said...

//பெற்றோர்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதில் உடை விஷயம் அத்தியாவசியமான ஒன்று. மாடர்ன் உடைகள் உடுத்த வேண்டாம்னு சொல்லவில்லை. பார்க்க கண்ணியமாக இருப்பது போல் உடுத்த சொல்லிக் கொடுக்கலாமே!
// மிக சரியாக சொல்லிருக்கிங்க... என்ன இருந்தாலும் நைட்டி அணிவதற்க்கு ஈஸியா இருந்தாலும் எல்லோரும் அதையே அதிகமா உடுத்த ஆரம்பித்திருக்காங்க...அதை வீட்டில் மட்டும் அணிவது போல் உடுத்தலாம்.

செந்தமிழ் செல்வி said...

கவி,
இந்த லூட்டி அங்குமா? உலகம் எங்கும் பாகுபாடே இல்லை போல. ம்ம்ம்ம்ம்.....
நன்றி கவி.
கீதா,
நீ சொல்லியதெல்லாம் முன்புதான். இப்ப அந்தக் காலம் மலையேறிப்போச்சு.
/முன்பெல்லாம், புடைவையை இழுத்து செருகிட்டு குழாயடி சண்டை போடுவாங்க. இப்ப நைட்டியில் அந்த அழகு வருமான்னு யோசிச்சு பார்க்கனும்../
ஆனாலும் சரி லொள்ளு தான் உனக்கு:-) வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டே. நன்றி.

மேனகா,
உடுத்த, வேலை செய்ய சுலபமாக இருக்கலாம். அதற்காக அப்படியே வெளியிலுமா வரவேண்டும்? ஏதோ கொஞ்சம் பேராவது யோசித்தால் சரி. நன்றிம்மா.கவி,
இந்த லூட்டி அங்குமா? உலகம் எங்கும் பாகுபாடே இல்லை போல. ம்ம்ம்ம்ம்.....
நன்றி கவி.
கீதா,
நீ சொல்லியதெல்லாம் முன்புதான். இப்ப அந்தக் காலம் மலையேறிப்போச்சு.
/முன்பெல்லாம், புடைவையை இழுத்து செருகிட்டு குழாயடி சண்டை போடுவாங்க. இப்ப நைட்டியில் அந்த அழகு வருமான்னு யோசிச்சு பார்க்கனும்../
ஆனாலும் சரி லொள்ளு தான் உனக்கு:-) வாய் விட்டு சிரிக்க வெச்சுட்டே!! நன்றி.

மேனகா,
உடுத்த, வேலை செய்ய சுலபமாக இருக்கலாம். அதற்காக அப்படியே வெளியிலுமா வரவேண்டும்? ஏதோ கொஞ்சம் பேராவது யோசித்தால் சரி. நன்றிம்மா.

athira said...

செல்வியக்கா... எனக்கு ஆரம்பம் இது ஓபின் ஆகவில்லை... இப்போ தட்டித்தடுமாறி சரியான இடத்துக்கே வந்து சேர்ந்திருக்கிறேன்.

விடுங்க செல்வியக்கா... உலகம் இப்ப எங்கேயோ போய்க்கொண்டிருக்கு:).

Vijiskitchencreations said...

செல்விக்கா என்ன நிங்க உலகம் எங்கேயோ போயாச்சு. அதிரா சொலவதை போல் தான். நாம் இந்தியாவில் அதுவும் பெங்களூரில் போய் பாருங்க வேற எங்கேயேயும் போக வேண்டாம்.
நைட்டி மாதிரி கெவுன் போடுவாங்க அது இந்த மிடில் ஏஜ் பென்கள் கூட போட தொடங்கியாச்சு.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்து பென்னாக இருந்த ஆண்டி இன்றைக்கு ஷாட்ஸ் டி ஷ்ர்டோட வலம் வர்ராங்க் சிங்கார சென்னையில். சில பேர் கேட்டிருக்காஙக் இந்த வெய்யிலுக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லிட்டாங்க. நிங்களும் டிரை பன்னுங்க என்று அவ்வளவு தான் அந்த கேட்டவங்க ரொம்ப நன்றி என்று சொன்னார்ங்க.

vanathy said...

செல்வி அக்கா, உலகத்தை மாற்ற முடியாது. நீங்கள் அமெரிக்கா வந்து பார்க்க வேண்டும். சிலர் போடும் உடைகளை பார்த்தால் நைட்டியே பரவாயில்லை போல இருக்கும்.


//இப்போ தட்டித்தடுமாறி சரியான இடத்துக்கே வந்து சேர்ந்திருக்கிறேன்.//

அதிரா, வயசானால தடுமாற்றம் வரும். எனக்கு விளங்குது....

செந்தமிழ் செல்வி said...

அதிரா & விஜி,
உலகம் எங்கோ போகுது தான். மாடர்ன் உடைகள் உடுத்துவது தவறு என்று சொல்லவில்லை.போதுமான உள்ளாடைகள் அணிந்து பார்க்க விரசமின்றி உடுத்தலாமே!
வானு,
சரியாகத்தான் சொல்லி இருக்கிறாய்:-) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!!!!

Jaleela Kamal said...

செல்வி அக்கா ரொம்ப நல்ல பகிர்வு, எனக்கும் முகப்பு ஓப்பன் ஆகல, நலைந்து முறை வந்து விட்டு இபப் தான் கமென்ட் வழியா பதிவை பிடித்தேன்.


ஐய்யோ இந்த நைட்டிய பற்றி சொல்ல நிறைய பதிவு இருக்கு.

லூசுங்க மாற்றிட்டு வரவேண்டியது தானே , கூட வர கணவனுக்குமா அது அசிங்கமா தெரியல.

இது நாம சொல்லி திருந்தும் ஜென்மங்கள் கிடையாது.

Asiya Omar said...

இப்ப இன்னும் மோசமாக போய்விட்டது அக்கா,வீட்டில் வாலிபபிள்ளைகள் இருக்காங்களேன்னு கூட கவலைப்படாம சில அம்மாக்களே உள்ளாடை இல்லாமல் அணிவதை எங்கே போய் சொல்வது?

செந்தமிழ் செல்வி said...

ஜலீலா,
நான் ப்ளாக் url மாற்றி விட்டேன். செக் பண்ணிக்கோங்க.
உண்மை தான். இன்னும் சொல்ல் நிறைய இருக்கு. நீங்க சொல்வது போல் இதுக நாம் சொல்லி திருந்தற ஜென்மங்கள் கிடையாது.

ஆசியா,
ம்ம்ம்... அதுவும் தான் நடக்குது. அவர்களுக்கா உறைத்தால் சரி.

அண்ணாமலையான் said...

மிக நல்ல பதிவு

செந்தமிழ் செல்வி said...

சகோ. அண்ணாமலையான்,
மிக்க நன்றி!

seyedkatheeja said...

அக்கா நைட்டியுடன் வெளியில் வருவது நான் கேரளாவில் தான் பார்த்து இருகேன். இப்ப நம்ம ஊரிலும் வெளில நைட்டியோட வர ஆரம்பிச்சிட்டாங்களா.வெளியில் போகும் போதாவது டீசண்டாக டிரஸ் செய்யனும்னு தெரியாதா மக்களுக்கு.

செந்தமிழ் செல்வி said...

கதீஜ்,
இங்கேயும் வந்தாச்சு:-(
தெரிஞ்சாலும் அதுக்கெல்லாம் கவலைபட்டுக்கிறதில்லை.

Post a Comment