Friday, March 19, 2010

இந்த தொடரை தொடர அழைத்த ஆசியாவுக்கு மிக்க நன்றி.

1. லக்கியின் பிறந்தநாள் பதிவில் இமாவின் பின்னூட்டம்:

/தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். லக்கி பர்த்டே டு யூ லக்கி. ;)
செல்வி... இப்பதான் புரியுது, கொஞ்ச நாளா என் கனவில முதுகில் லவ்பர்ட் அமர்ந்து இருக்க ஒரு வெள்ளைப் பப்பி வந்த ரகசியம்!!/

2. லக்கியின் காத்திருப்பில் ஜீனோவின் பின்னூட்டம்:

/வாவ்...அழகான லக்கி!
லக்கி,லக்கி, லக்கி,லக்கி!
லவ் பண்ணத் தெரிஞ்சா நீ லக்கி! [டாங்க்ஸ் டு பிரபுதேவா! :)]
திஸ் லக்கி பாக்க ஜீனோ மாதிரியே வெஜிடேரியன் :) போலத்தான் தெரிகிறான் ஆன்ட்டி!
நீங்க பாதாம் சிக்கன் எல்லாம் தருவீங்களோ அவனுக்கு? இட்ஸ் ஓகே, ஆனா புரிட்டோ எல்லாம் கொடுத்துப் பழக்காதீங்கோ..அது அவன் வயித்துக்கு கெடுதல்! ;)/

3. லவ்பேர்ட்ஸ் இறுதிப் பகுதியில் ஆசியாவின் பின்னூட்டம்:

/லவ் பேர்ட்ஸ் பகுதி -2 இனிமேல் வருமா?ஆத்தா மாடு வளர்த்தா,கோழி வளர்த்தா மாதிரி,லவ் பேர்ட்ஸ் வளர்த்தா,லக்கி வளர்த்தா ,மீன் வளர்த்தான்னு டயலாக் எழுதலாம் போல.சூப்பர் செல்விக்கா செல்லங்களை(குட்டிமாவை) வைத்து எழுதிய இந்த தொடர் அருமை./

4. லக்கியின் பிறந்தநாளில் சாய் கீதாவின் பின்னூட்டம்:

/அட!
லக்கிக்கு பிறந்தநாளா???
சொல்லவேயில்ல!!!
பிறந்தாலும் இந்த லக்கி மாதிரி "லக்கியா" பிறக்கணும்னு
லக்கி இனமெல்லாம் பொறாமைப்படபோகிறது.
போட்டோவில் மட்டும் கேக்கை காட்டிட்டு எங்களுக்கெல்லாம் பெரிய பீஸாய்
"அல்வா" கொடுத்திட்டீங்களே செல்விக்கா!/

5. சமைக்குமுன் பதிவில் இலாவில் பின்னூட்டம்:

/உங்க பதிவுக்கான பதில் சொல்ல கொஞ்சம் வேலை செய்து படமெடுக்கணும்... டிப்ஸ் கொடுத்தா ஃபாலோ பண்ணனும் இல்லை.. புது வீடு வேற சும்மா சொல்லக்கூடாது... எக்ஸ்பீரியன்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான்... என்னை மாதிரி கத்துக்குட்டி கத்துக்குட்டி தான்....
அப்படியே சைட்ல யெங் பாட்டின்னு சொல்லிட்டாபோச்சு...
இந்த சமையல் அறை ஒழுங்கமைப்பு பத்தி ஒரு டியூசன் எடுங்க... என்னை மாதிரி "ஆர்கனைசேஷனலி சேலஞ்ச்ட்" க்கு உதவும்.../

6. எப்படி இருந்த சுடிதாரில் ஸ்னேகிதி ஸாதிகாவின் பின்னூட்டம்:

/தோழி,சுடியை சூட்டிகையாக்கிட்டீங்களே!!/

7. லவ் பேர்ட்ஸ் பகுதி-4-ல் கவிசிவாவின் பின்னூட்டம்:

/மனுஷங்களை மாதிரியே பறவைகளிலும் ரவுடி சொர்ணாக்கா இருக்காங்களா?!/

8. லவ் பேர்ட்ஸ் பகுதியில் கீதாவின் பின்னூட்டம்:

/எங்கப்பா, மாடு வளர்த்தாரு,ஆடு வளர்த்தாரு, கோழி வளர்த்தாரு,பூனை வளர்த்தாரு, அவ்வளவு ஏன், என்னைக்கூட வளர்த்தாரு, ஆனா லவ் பேர்ட்ஸ் வளர்க்கலியேயேஎஏஏஏஏ!/

9. குறிப்பு திருட்டு பகுதியில் ஜலீலாவின் பின்னூட்டம்:

/செல்வி அக்கா எல்லாத்தையும் போட்டுட்டாஙகளா, ஐய்யோ அய்யோ எங்கே போய் முட்டி கொள்வது, எல்லா வீட்டு சாப்பாட்டையும் திருடி பூட்டாங்களா
நானும் சம்பந்த பட்ட இடத்திலெல்லாம் போய் கமெண்ட் வழியா போய் எல்லார் சார்பாவும் சண்டை போட்டாச்சு பயன்ல்லை. இப்படி ஹே ஹே நான் செயிலுக்கு போரேன் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொல்வது போல்./

10. இமாவின் 'தலைப்பிடக் கோருகிறேன்' பதிவில் செல்வியின் பின்னூட்டம்:-)

/உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!??/

ஆசியா, சுலபமாக சொல்லி விட்டீர்கள். மொத்தம் போட்டதே 16 பதிவு. அதற்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாமே என்னைப் பொறுத்தவரை முக்கியமானவைகள் தான். எனக்குப் பிடித்தமானவைகள் தான். அதில் என்னை சிரிக்க வைத்தவைகள் தான் மேலே உள்ளவை.
இமாவின் பரிசு கிடைத்ததால் என் பின்னூட்டம் எனக்குப் பிடித்தது.

எனக்கு இருக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவும் அதிக போட முடிவதில்லை. மற்ற பிளாக்குகளுக்கு போய் பின்னூட்டமும் கொடுக்க முடியலை. வருத்தமாகத்தான் இருக்கு. தயவு செய்து யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

இதுவரை பின்னூட்டம் அளித்தவர்களுக்கும், இனி அளிக்கப் போகிறவர்களுக்கும் நன்றி.

இத்தொடரைத் தொடர இமா, மேனகா மற்றும் கவிசிவாவை அன்புடன் அழைக்கிறேன்.

10 comments:

Menaga Sathia said...

சூப்பர் பின்னூட்டங்கள் செல்விமா... என்னையும் தொடர அழைத்ததற்க்கு மிக்க நன்றி.விரைவில் தொடர்கிறேன்...

//எனக்கு இருக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவும் அதிக போட முடிவதில்லை. மற்ற பிளாக்குகளுக்கு போய் பின்னூட்டமும் கொடுக்க முடியலை. வருத்தமாகத்தான் இருக்கு. தயவு செய்து யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள்.// உங்களின் நேரமின்மை எங்களுக்கு புரிகிறது செல்விமா.நேரம் கிடைக்கும் போது வாருங்கள்...

Menaga Sathia said...

ஹாய்ய்ய்யா இப்பவும் நாந்தான் பர்ஸ்ட்...

இமா க்றிஸ் said...

எ.கொ.செ.இ? ;) எங்கேயோ நிற்கும் போது தற்செயலா என் பெயர் தெரியுதே என்று விழுந்தடிச்சு இங்க வந்து பார்த்தா... இப்பிடிப் பெரிய பப்பாமரத்தில ஏத்தி வச்சிருக்கிறீங்கள். ;) இருந்தாலும் சந்தோஷமாகத் தான் இருக்கு.ரெண்டு இடத்தில என் பெயர். ;) ரெண்டாவது இடம் என் செல்ல மருமகன்.. ;)

கடைசில... ;) தொடர எனக்கும் அழைப்பா!! இங்கதான் கொஞ்சம் இடிக்குது. ;) இது கம்பியில நடக்கிற வேலை மாதிரிக் கிடக்கு. ;)
பரவாயில்லை, அஜஸ்ட் பண்ணலாம். அழைப்புக்கு நன்றி. ;)

ஆனால் எனக்கு நிபந்தைகள் என்ன எண்டு ஒண்டும் தெரியாதே!! கொஞ்சம் வந்து விளங்கப் படுத்தி விடுங்கோ செல்வி.

ஸாதிகா said...

ஆஹா தோழி..அருமையான பின்னூட்டங்களை த்ர்ர்வுசெய்து இருக்கின்றீர்கள்.எனது பின்ன்னூட்டமும்.நன்றி!

Jaleela Kamal said...

பின்னூட்ட தேர்வில் நான் போட்டத பார்த்து எனக்கே ரொம்ப சிரிப்பு வருது.

நன்றி செல்வி அக்கா என் பின்னூட்டத்தையும் எடுத்து போட்டு இருக்கீங்க.

geetha said...

ஹை!
பின்னூட்டங்களுக்கு ஒரு க்ரீடம். சந்தோஷம் செல்விக்கா!

Asiya Omar said...

செல்விக்கா என் அழைப்பை ஏற்று அருமையான பின்னூட்டங்களை போட்டு அசத்திட்டீங்க.மிக்க நன்றி.

செந்தமிழ் செல்வி said...

தொடரை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி மேனகா! பாராட்டுக்கு நன்றி.
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதிவு போடுவேன்.
ம்ம்ம். இப்பவும் நீதான் ஃபர்ஸ்ட்!!

இமா,
அதான் சூப்பரா கலக்கிட்டு இருக்கீங்களே! அப்பறம் என்ன? கலக்குங்க!!

ஸ்னேகிதி ஸாதிகா,
நீங்களெல்லாம் அவ்வளவு சுவையாக பின்னூட்டம் கொடுத்து இருக்கிறீர்கள்:-)

ஜலீலா, நானும் படித்து சிரித்த பின்னூட்டம் அது.

நன்றி கீதா.

ஆசியா, உண்மையில் அந்தத் தலைப்பில் தொடரணும்னு தெரியலை. அது நீங்க கொடுத்துகிட்டதுன்னு நினைச்சேன். ஏதோ எனக்குத் தெரிந்தவரை.........

athira said...

ஆகா செல்வியக்கா அசத்திட்டீங்க. நீங்க கவிசிவாவை அழைத்ததை நான் காணவில்லை, நானும் அழைத்திருக்கிறேன் இட்ஸ் ஓக்கை. இமாவின் பதிவு பார்த்துத்தான் உங்கள் பிளாக்கும் இயக்கத்திலுள்ளதென்பதை அறிந்து இங்கு வந்தேன்....

செந்தமிழ் செல்வி said...

அதிரா,
எப்படியோ கடைசியில் கண்டு விட்டாயே:-) கவி இருவரும் அழைப்புக்கும் சேர்த்து சூப்பரா ஏமாத்திட்டா!!

Post a Comment